Sunday, February 26, 2017
நெடுவாசல் விவசாயி சுப்பிரமணி
நெடுவாசல் விவசாயி சுப்பிரமணி அவர்கள் தனிஒருவன் ஆக கடந்த மூன்று ஆண்டுகளாக வலிமை வாய்ந்த மத்திய அரசை எதிர்த்து போராடி வந்த முழுக்கதையையும் நேற்றிரவு அவர் பன்னை வீட்டில் தங்கிய பொழுது ஒரே மூச்சில் சொல்லிமுடித்தார்...
இதைப்பற்றி விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்...
நேரம் இன்று கிடைக்காததால் ஒரு சில வார்த்தைகளில் சொல்கிறேன்...
"இந்த மண்ணையும் விவசாயத்தையும் நேசிக்கும் தன்னலமில்லா மனிதன்"
அவர் சொன்ன வார்த்தைகளில் ஒன்று அப்படியே உங்கள் பார்வைக்கு இதோ..
தம்பி
அவிங்க எத்தனை கோடி உங்களுக்கு வேண்டும் என்று கேட்டு சில ஆட்களை அனுப்புறாங்க...
40 லட்சம் பேரை உயிரோடு சுடுகாட்டுக்கு அனுப்பும் இந்த திட்டத்தை அனுமதிக்க இவிங்க 400 கோடி கொடுத்தாலும் வாங்கமாட்டேன் தம்பி...
அப்புடி செஞ்சா நான் மனுசனே இல்ல...
அவர் இப்படி சொல்லி முடித்த போது நம்மாழ்வார் மற்றும் வள்ளலார் இருவர் முகமும் என் நினைவில் வந்து மறைந்தார்கள்...
தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழர் இனத்தை காப்போம் 996299908
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment